F

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

ஐபிஎல்: சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா!!



ஐபிஎல்: சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா!!


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரர் மற்றும் நிர்வாகிகள் என 13 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா அச்சம் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன. செப்டம்பரில் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டி தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே அணி வீரர்கள் கடந்த 21 ஆம் தேதி துபாய் புறப்பட்டு சென்றனர்.
அணி வீரர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் ஏற்கெனவே மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,இன்று நான்காவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில், அணியின் பந்துவீச்சாளர் ஒருவருக்கும், அணி நிர்வாகிகளுக்கும் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள அனைவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் நோக்கில் சிஎஸ்கே அணி வீரர்கள் இன்று முதல் பயிற்சியை தொடங்க இருந்தனர். இந்த நிலையில் அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ST