F

covide 19 Report ஒரு கோடியே 77 லட்சத்து 977 பேர் மீண்டனர்

ஒரு கோடியே 77 லட்சத்து 977 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 31 ம் தேதி ) காலை: 06:40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 77 லட்சத்து 977 பேர் மீண்டுள்ளனர்.


6:01 AM IST

ஒரு கோடியே 77 லட்சத்து 828 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 31 ம் தேதி ) காலை: 06:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 77 லட்சத்து 828 பேர் மீண்டுள்ளனர்.


5:33 AM IST

கர்நாடகா: 7,101 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் 7,110 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,42,229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் மாநில அளவில் 72.1 சதவீதமாக உள்ளது.



4:31 AM IST

மஹா.,வில் புதிதாக 7,690 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

மஹா.,வில் ஒரே நாளில் 7,690 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.62 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 16,408 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 7,80,689 ஆக அதிகரித்தது.புதிதாக 296 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 24,399 ஆக உயர்ந்தது. ஒரே நாளில், புதிதாக 7,690 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,62,401 ஆக உயர்ந்தது. 1,93,548 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் புனேயில் மட்டும் 51,909 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


3:45 AM IST

கேரளாவில் ஒரே நாளில் 1,766 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கேரளாவில் ஒரே நாளில் மேலும் 1,766 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,849 ஆக அதிகரித்துள்ளது. மாநில அளவில் கொரோனா மீட்பு விகிதம் 67.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.


2:28 AM IST

கொரோனா தொற்று 2ம் முறை தாக்க வாய்ப்பில்லை

ஏற்கனவே கொரோனா பாதித்த நபருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதாக செய்தி வெளியான நிலையில், அது கடந்த கால தொற்றின் இறந்த வைரஸ்களால் வரும் முடிவுகள் என்றும், அதை நினைத்து அச்சம் தேவையில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


1:30 AM IST

டில்லியில் 1,54,171 பேர் கொரோனாவில் இருந்து மீட்பு

டில்லியில் கொரோனா தொற்றில் இருந்து 1,54,171 பேர் குணமடைந்ததாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டில்லியில் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,54,171 ஆக உயர்ந்தது. தற்போது 14,793 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 6,881 RTPCR/CBNAAT/ TrueNat சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 13,555 விரைவான ஆன்டிஜென் சோதனைகளும் நடத்தப்பட்டன. இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் 15,69,096 ஆக உள்ளன. டில்லியில் தற்போது 820 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.


1:01 AM IST

கொரோனா திடீர் இறப்புகளை தடுக்கும் 'LMWH' மருந்து

கொரோனாவால் ஏற்படக்கூடிய திடீர் இறப்புகளை 'LMWH' மருந்து தடுக்கும் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனாவால் உலகின் பலநாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கொரோனாவால் ஏற்படும் உயரிழப்பை 'LMWH' மருந்தினால் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் 90 சதவீத உயிரிழப்பை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


12:32 AM IST

பீஹாரில் கொரோனா மீட்பு விகிதம் 86.88 சதவீதமாக உயர்வு

பீஹாரில் கொரோனாவில் இருந்து புதிதாக 2,231 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் கொரோனா மீட்பு விகிதம் 86.88 சதவீதமாக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.


12:05 AM IST

கொரோனாவிலிருந்து மீண்டார் கேரளாவின் 110 வயது பாட்டி

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 110 வயது பாட்டி முற்றிலுமாக குணமடைந்துள்ளார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரந்தாதனி வரியத் பத்து (110) என்பவர் கடந்த 18 ம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது அதிகம் என்றாலும் அவருக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளன. இவர் எந்தவித பதற்றமும் இன்றி சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதனிடையே கேரள மாநிலத்திலேயே கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்த மிக வயதான நபர் வரியத் பத்து பாட்டி தான் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாதெரிவித்துள்ளார். மாநில சுகாதார அமைச்சர் பாட்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார். பாட்டியை கொரோனா தொற்றிலிருந்து காப்பாறறிய மருத்துவர்களுக்கு பாட்டி குடும்பத்தினர் பாரட்டு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!


டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று அருண்மிஸ்ரா தலைமையிலான நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் உச்சநீதிமன்ற செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும் மற்றும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார்.


இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த வழக்கு மீண்டும் கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதனிடையே மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்றைக்கு இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று அருண்மிஸ்ரா தலைமையிலான நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது

இந்தியா - பாக்., எல்லையில் 20 மீ., நீளம் சுரங்கம் கண்டுபிடிப்பு


இந்தியா - பாக்., எல்லையில் 20 மீ., நீளம் சுரங்கம் கண்டுபிடிப்பு

ஜம்மு : காஷ்மீர் மாநிலம் ஜம்முவில், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் வேலிக்கு அடியில் 20 மீ தூரம் கொண்ட சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் ஊடுருவவும், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தவும், இது சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில், இது போன்று வேறு ஏதும் கட்டமைப்புகள் உள்ளனவா என வீரர்கள் தேடி வருகின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவலை எதிர்ப்பதில் விழிப்புடன் இருக்குமாறு, பிஎஸ்எப் டிஜிபி இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா உத்தரவிட்டுள்ளார்.

இந்திய எல்லை வேலியில் இருந்து 50 மீ., தொலைவில் உள்ள இந்த சுரங்கபாதையை, நேற்று முன்தினம், ஜம்முவின் சம்பா செக்டார் பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் கண்டறிந்தனர். அதனை ஆய்வு செய்த போது, அதன் வாயில் உள்ளே பிளாஸ்டிக் மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் அடையாளங்களாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சுரங்கப்பாதையை முழுவதுமாக கண்டுபிடிப்பதற்காக ஜேசிபி இயந்திரம் உடனடியாக கொண்டு வரப்பட்டு தோண்டப்பட்டது. பிஎஸ்எப் ஐஜி ஜம்வால், அந்த இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார்.

அந்த சுரங்கத்தில் இருந்த மணல் மூட்டைகளில் கராச்சி மற்றும் ஷகர்கார்க் என எழுதப்பட்டிருந்தது. அதில் உள்ள தேதிகள் மூலம் அந்த மூட்டைகள் சமீபத்தில் தான் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சுரங்கம் அருகே 700 மீ., தூரத்தில் பாகிஸ்தான் எல்லையில் குல்ஜார் செக் போஸ்ட் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சியின் மொத்த உருவம் வசந்தகுமார் எம்.பி.



தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சியின் மொத்த உருவம் வசந்தகுமார் எம்.பி
.

கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் தனது தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தொகுதியில் முகாமிட்டு ஓடி ஓடி சென்று உதவிய வசந்தகுமாரை கொரோனா சொந்த ஊரில் ஓய்வெடுக்க வைத்துவிட்டது.

மறைந்தார் வசந்தகுமார் என்று சூரியன் மறையும் நேரத்தில் காதில் வந்து விழுந்த சேதியை தமிழக மக்களால் ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை.

தும்பை பூ வெண்மையில் பளிச்சென்று வெள்ளை நிற பேன்ட்-சட்டை! எப்போதும் கழுத்தை அலங்கரித்த காங்கிரஸ் துண்டு! புன்னகை மாறாத முகம்! மறைந்தாலும் மறக்க முடியாது.

ஏனெனில் தமிழகம் முழுவதும் மக்கள் அடிக்கடி பார்த்த முகம். 64 கிளைகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் பரவி படர்ந்துள்ள தனது வசந்த் அன்ட் கோ நிறுவனத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார்.

இந்தியாவின் கடைகோடி நகரமான கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் என்ற சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து இந்திய பாராளுமன்றம் வரை சென்றவர்.

தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி இந்த மூன்றின் மொத்த உருவம்தான் வசந்தகுமார். இதன்மூலம்தான் இவ்வளவு உயர்ந்த சிகரத்தை தொட முடிந்தது. வெற்றிக்கொடியை கட்ட முடிந்தது.

ஏழ்மையின் பிறப்பிடம் தான் வசந்தகுமார் பிறந்த இடம். அரிகிருஷ்ணன் நாடார்-தங்கம்மை தம்பதிகளுக்கு குமரி அனந்தன் உள்பட 5 ஆண் பிள்ளைகள். 6-வது இரட்டையர்களாக பிறந்தவர்கள் வசந்த குமார், வசந்த குமாரி.

சிறு வயதிலேயே ஊரில் திருவிழாக்கள் நடக்கும்போது ‘சர்பத்’ விற்பார். ஒரு டம்ளர் 2 காசு. வறுமையிலும் படிப்பை தொடர்ந்தார்.

மூத்த சகோதரரான குமரி அனந்தன் காமராஜரின் தீவிர பக்தர். அரசியலில் தீவிரமாக இருந்தார். இலக்கியம் கலந்த அவரது தமிழ்பேச்சு மக்களை கவர்ந்தது.

காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் அரசியல் மேடைகளில் குமரி அனந்தனுக்கு தனி இடம் உண்டு.

அவ்வாறு அண்ணன் பேசும் அரசியல் கூட்டங்களுக்கு வசந்தகுமாரும் செல்வார். அந்த நேரத்தையும் அவர் வீணாக்கவில்லை. அந்த கால கட்டத்தில் வசந்தகுமாரின் அண்ணன் தயாரித்த ‘குமரிபேனா’வுக்கு தனி மவுசு இருந்தது. ஒரு பேனாவின் விலை 4 அணா. அரசியல் கூட்டங்களில் வசந்தகுமார் அந்த பேனாவை விற்பார்.

எப்படியும் முன்னேறலாம் என்ற தன்னம்பிக்கை தான் அவரை வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு அழைத்து சென்றது.

1971-ல் குமரி அனந்தனை வண்ணாரப்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக காமராஜர் அறிவித்தார்.

அண்ணனுக்கு தேர்தல் வேலை செய்வதற்காக முதல் முதலாக சென்னைக்கு வந்தார். அந்த தேர்லில் குமரி அனந்தன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஆனால் வாழ்க்கையில் வெற்றிப் பயணத்தை தொடங்கிய நேரம் அது. வேலை இல்லை. வேலை தேட தொடங்கி இருக்கிறார். எங்கும் வேலை கிடைக்கவில்லை.

அப்போது குமரி அனந்தனும், கவிஞர் ரவி பாரதியும் வசந்தகுமாரை அழைத்துக்கொண்டு வி.ஜி.பன்னீர்தாசிடம் சென்றிருக்கிறார்கள்.

கடற்கரை அலுவலகத்தில் மாதச்சம்பளம் ரூ.80-க்கு வேலை கொடுத்துள்ளார்கள்.

சைக்கிளில் வேலைக்கு சென்ற அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை, துடைப்பத்தால் அலுவலகத்தை சுத்தப்படுத்துவது, தண்ணீர் பிடித்து வைப்பது போன்றவை.

பட்டப்படிப்பு படித்துவிட்டு துடைப்பத்தை எடுத்து வேலை செய்வதில் வசந்தகுமார் தயக்கம் காட்டவில்லை.

வி.ஜி.பி. நிறுவனம் ரேடியோ, மின்விசிறி, கடிகாரம் போன்ற வீட்டு உபயோக பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்தது. அதில் விற்பனையாளராக இருந்த வசந்தகுமார் வீடு வீடாக தவணை தொகையை வசூலிக்க பல கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மிதிக்க வேண்டியிருந்தது. அதற்கும் அவர் சளைக்கவில்லை.

அந்த கடினமான உழைப்புதான் அவரை கிளை மேலாளர் பதவிக்கு உயர்த்தியது. மாத சம்பளமும் ரூ.300 ஆக உயர்ந்தது.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வி.ஜி.பி. நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது அவரது நிர்வாக திறமையை பார்த்து அவரை மும்பை அலுவலகத்துக்கு இடம் மாற்றினார்கள். ஆனால் வசந்தகுமார் மும்பை செல்ல விரும்பவில்லை. அதனால் அந்த வேலையை விட்டு நின்று விட்டார்.

விற்பனை துறையில் தனக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு தனியாக தொழில் செய்ய முடிவெடுத்தார். ஆனால் முதலீடு செய்வதற்கு அவரிடம் பணம் இல்லை.

ஆனால் அவர் சம்பாதித்து வைத்திருந்த வி.ஜி.பி.யின் வாடிக்கையாளர்களில் ஒருவர் தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள தனது கடையை ரூ.8 ஆயிரத்துக்கு விற்க முன் வந்தார். 6 மாத தவணையில் அந்த கடையை வாங்கினார். மற்றொரு வாடிக்கையாளர் அவருக்கு 22 ரூபாய் கொடுத்திருக்கிறார். அதுவே அவரது மூலதனம்.

இப்படி தனது 28-வது வயதில் 1978-ல் வசந்த் அன்ட் கோ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

விளம்பர பலகை விலை கொடுத்து வாங்க கூட பணம் இல்லாமல் பேக்கேஜிங் பெட்டியில் இருந்த மரப்பலகையை எடுத்து உருவாக்கினார். அவர் விற்ற முதல் பொருள் ரூ.25 மதிப்புள்ள மடிப்பு நாற்காலிகள்.

1985-ல் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் அறிமுகமானபோதுதான் வசந்தகுமாரின் பயணம் புதிய வேகம் பிடித்தது. தனது வழக்கமான விற்பனை பொருட்களை தவிர தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பு நிறுவனங்களில் ஆர்டர் கேட்டார். ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டார். ஆனால் தனது அணுகுமுறையால் 960 டி.வி. பெட்டிக்களுக்கான ஆர்டரை பெற்றார்.

அவரது விற்பனை யுக்தியும், வாடிக்கையாளர் சேவையும் வாடிக்கையாளர்களை இழுத்து வந்தது.

முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தயாரிப்புகளை வசந்த் அன்ட் கோ விற்க வேண்டும் என்ற தேடி வந்தன. இப்படி பெருகிய வியாபாரத்தால் வசந்த் அன்ட் கோ கிளைகளும் தமிழகம் முழுவதும் பரவியது.

தொழிலில் காட்டிய அதே ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் அரசியலிலும் காட்ட தொடங்கினார். தனது அண்ணன் வழியில் தன்னை காங்கிரசில் ஈடுபடுத்திக் கொண்டார். கட்சியிலும் படிப்படியாக வளர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றார்.

இரண்டு முறை நாங்குனேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

காமராஜரின் தீவிர தொண்டராக இருந்த வசந்தகுமார் காமராஜர் போட்டியிட்டு வென்ற தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசையும் கடந்த தேர்தலில் நிறைவேறியது.

கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் தனது தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தொகுதியில் முகாமிட்டு ஓடி ஓடி சென்று உதவினார்.

இரக்கமற்ற கொரோனா அவரை முடக்கிப் போடுவதற்காக தொற்றிக்கொண்டு நிரந்தரமாக சொந்த ஊரில் ஓய்வெடுக்க வைத்துவிட்டது. வாழ்க்கையில் ஜெயித்தார். கொரோனாவிடம் தோற்று போய்விட்டார்.

ஐபிஎல்: சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா!!



ஐபிஎல்: சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா!!


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரர் மற்றும் நிர்வாகிகள் என 13 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா அச்சம் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன. செப்டம்பரில் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டி தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே அணி வீரர்கள் கடந்த 21 ஆம் தேதி துபாய் புறப்பட்டு சென்றனர்.
அணி வீரர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் ஏற்கெனவே மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,இன்று நான்காவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில், அணியின் பந்துவீச்சாளர் ஒருவருக்கும், அணி நிர்வாகிகளுக்கும் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள அனைவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் நோக்கில் சிஎஸ்கே அணி வீரர்கள் இன்று முதல் பயிற்சியை தொடங்க இருந்தனர். இந்த நிலையில் அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த மாதத்தில் ஒரு மாத மின்சார பில் தொகையை கட்டினால் போதும்; மத்திய பிரதேச அரசு அறிவிப்பு



அடுத்த மாதத்தில் ஒரு மாத மின்சார பில் தொகையை கட்டினால் போதும்; மத்திய பிரதேச அரசு அறிவிப்பு


அடுத்த மாதத்தில் ஒரு மாத மின்சார பில் தொகையை மக்கள் கட்டினால் போதும் என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
போபால்,


மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, மின் வாரியத்திற்கு மக்கள் செலுத்த வேண்டிய அனைத்து அதிகப்படியான பில் தொகையையும் தள்ளி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால், அடுத்த மாதத்தில் ஒரு மாத மின்சாரத்திற்கான பில் தொகையை மக்கள் கட்டினால் போதும் என கூறினார்.


கொரோனா பாதிப்புள்ள சூழலில், நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்துவதற்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாணவ மாணவியருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட கூடும் என கூறி தேர்வுகளை தள்ளி வைக்க வலியுறுத்தி வருகின்றன. இதற்காக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன.


ஆனால், நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதுபற்றி சவுகான் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை சரியான நேரத்தில் நடத்த வேண்டும். அதனால், நம்முடைய மாணவர்களின் ஒரு வருடம் வீணாகாமல் தடுக்கப்படும். இது அவர்களுடைய வருங்காலம் பற்றியது என கூறியுள்ளார்.

பள்ளி மாணவ, மாணவிகளின் தற்கொலை அதிகரிப்புக்கு இதுதான் காரணம் – தமிழகத்தில் அதிர்ச்சி தகவல்



பள்ளி மாணவ, மாணவிகளின் தற்கொலை அதிகரிப்புக்கு இதுதான் காரணம் – தமிழகத்தில் அதிர்ச்சி தகவல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகேசன். இவருடைய மகள் ரித்திகா, 11 ஆம் வகுப்பு முடித்திருந்த நிலையில், கொரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்துள்ளார். தற்போது ஆன்லைனில் 12 வகுப்புக்கான பாடங்கள் நடைபெற்று வரும் நிலையில், செல்போன் இல்லாததால் மாணவி ரித்திகா படிக்க முடியாமல் தவித்துள்ளார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் செல்போன் வாங்கித்தர மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரித்திகா, இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிழக்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் விக்னேஷ் ஒன்பதாம் வகுப்பு முடித்திருந்தார். தற்போது ஆன்லைனில் 10 ஆம் வகுப்புக்கான பாடங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், ஆன்லைன் வகுப்புக்கு தந்தை செல்போன் வாங்கி தராததால், கடந்த ஜுலை 31 ஆம் தேதி மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்துக்கொண்டார்.
நாகை மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் என்பவரது மகள் ஹரிணி. நாகை வடகுடியில் உள்ள அமிர்தா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளி கட்டணம் செலுத்தாததால், மாணவி ஹரிணியை வகுப்பில் பங்கேற்க தனியார் பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் விரக்தியடைந்த அவர், வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளார் .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கட்டிடப்பணி ஒப்பந்தகாரரான பாண்டி – மீனா தம்பதி மகனான அபிஷேக் 10-ம் வகுப்பு படித்து வந்தான். ஆன்லைன் வகுப்பு மூலம் வீட்டிலிருந்தே படித்த அபிஷேக், பாடம் சரியாக புரியவில்லை என தனது தந்தையிடம் கூறியதால் அவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிஷேக், கடந்த 19 ஆம் தேதி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செல்போன் வாங்கித் தராததால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீண்டுக்கொண்டே போகிறது.

கருப்பினத்தவர் மீது துப்பாக்கிச்சூடு: சின்சினாட்டி அரையிறுதியில் இருந்து நவோமி ஒசாகா விலகல்



கருப்பினத்தவர் மீது துப்பாக்கிச்சூடு: சின்சினாட்டி அரையிறுதியில் இருந்து நவோமி ஒசாகா விலகல்


கருப்பினத்தவர் மீது துப்பாக்கிச்சூடு: சின்சினாட்டி அரையிறுதியில் இருந்து நவோமி ஒசாகா விலகல்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்-க்கு பயிற்சியாக கருதப்படும் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


அரையிறுதியில் ஒசாகா எலிஸ் மெர்ட்டன்ஸ்-ஐ எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.


இந்நிலையில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரையிறுதியில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார். ஒசாகாவின் முடிவு டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, விஸ்கான்சின் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் காருக்கு அருகே அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு பின்னாலிருந்து துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.


இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஜேக்கப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், ஜேக்கப் பிளேக் மீதான தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


சிலர் போலீசார் மீது கற்கலை வீசியும், அருகில் இருந்த கார்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கலவரத்தில் ஈடுப்பட்டனர்.


இதனால் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைக்கும் விதமாக கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


போராட்டங்களுக்கு நடுவே நவீன ரக துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு இளைஞன் போராட்டக்காரர்களை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டான். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத போராட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து ஒட முயற்சித்தனர்.


ஆனாலும், அந்த இளைஞன் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அதில் இரண்டு பேர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயங்களுடன் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில அரசுகளைப் போல் தமிழக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில அரசுகளைப் போல் தமிழக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில அரசுகளைப் போல் தமிழக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,


நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் பங்கேற்ற ஆன்லைன் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் மற்றும் மேற்கு வங்கம், மராட்டியம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட பஞ்சாப்,ராஜஸ்தான்,சட்டீஸ்கர்,புதுச்சேரி,மேற்கு வங்காளம், ஜார்கண்ட், மராட்டியம் உள்ளிட்ட 7 மாநிலஅரசுகள் முடிவு செய்துள்ளன.


இந்த நிலையில் நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில அரசுகளைப் போல் தமிழக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-


நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். என்றும் அதற்கான முயற்சியை எடுத்த அன்னை சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவி்ததுக் கொள்கிறேன். மேலும் நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்.


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு



நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

புதுடில்லி: செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதி, நாடு முழுவதும் மொத்தம் 3,843 மையங்களில் நடைபெறவுள்ளது. அதேபோல், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்.,1 முதல் 6ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்.,27ம் தேதியும் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால், கொரோனா பரவலுக்கு இடையே நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பான மனுவையும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே ஜேஇஇ தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஆக.,26) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் யூ.ஜி.சி. கல்லூரி இறுதித் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதில் பிடிவாதமாக உள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து எனவும், தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண் வழங்கப்படும் எனவும், உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ


தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ


தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு கடந்த மே மாதத்தில் இருந்து மத்திய அரசு படிப்படியாக தளர்வுகள் அளித்து வருகிறது. பெரும்பாலானவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10-ந்தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.


வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனால் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.


இந்நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில் ‘‘மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். குறைந்த ரசிகர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


ஓடிடி-யில் படத்தை வெளியிடுவது சினிமா துறைக்கு ஆரோக்கியமானது அல்ல. தியேட்டர்களை திறக்க சிறிது காலம் ஆவதால் ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதை விட பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்’’ என்றார்

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார்: ராணுவ மருத்துவமனை


பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார்: ராணுவ மருத்துவமனை


முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வந்தது. இதனிடையே, அவரது உடல்நிலையில் அவ்வப்போது சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் அண்மையில் தெரிவித்தனர்.


இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தற்போது ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது

தியேட்டர்கள் எப்போது திறப்பு? 1-ந்தேதி ஆலோசனை: அமைச்சர் கடம்பூர் ராஜு



தியேட்டர்கள் எப்போது திறப்பு? 1-ந்தேதி ஆலோசனை: அமைச்சர் கடம்பூர் ராஜு


தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1 ந்தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,


தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதால் தியேட்டர்கள் மூடப்பட்டன. தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1ந்தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.


ஆலோசனையில் மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்

5 ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள்

சிறியவர் முதல் பெரியவர் வரை ஐஸ்கிரீம் சுவைப்பதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். சில சினிமா நடிகைகள் ஐஸ்கிரீம் சாப்பிடாமல் தங்களால் உயிர் வாழவே முடியாது என காதோர முடியை கோதி விட்டுக்கொண்டே பேச்சு கொடுப்பதையும் நாம் பார்த்திருக்கின்றோம். காதலிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தே விருத்தியாகி காதலை கைவிட்டு இளைஞர்களும் பலர். மூக்கு முகரை உள்ளிட்ட பகுதிகளில் அப்பிக்கொண்டு ஜில்லி பான ஐஸ்கிரீமை நாவால் நக்கி சுவைப்பது ஒரு அலாதியான அனுபவம்தான். ஆனால் இத்தகைய ஆலிம்களுக்கு பின்னணியில் இருக்கும் சில பயங்கரங்களை அறிந்தால் உங்களில் பாதிப்பேர் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வீர்கள் அல்லது வெறுத்து விடுவீர்கள். அவ்வாறான 5 ஐஸ்கிரீம் பயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ஐஸ்கிரீம் வாங்கும்போது ஸ்ட்ராபெர்ரி பிளவர் ஆஃ கொடுங்க என கடைக்காரரிடம் கேட்டு வாங்குவோர் பலர். கேக் பிஸ்கட் ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் செயற்கையாக தயாரிக்கப்படும் ஸ்ட்ராபெர்ரி சுவை சேர்க்கப்படுகின்றது. இந்தச் செயற்கைச் ஸ்ட்ராபெர்ரி சுவை எங்கிருந்து வருகிறது என தெரிந்தால் அடுத்த முறை ஸ்ட்ராபெரி பிளவர் வாங்கவே மாட்டிர்கள். வட அமெரிக்காவில் பரவலாக வாழ்கின்றது wild beavers விலங்கினம் நீரிலும் நிலத்திலும் வாழும் அந்த விலங்கினத்தின் ஆசனவாய்ப் பகுதியில் இருக்கும் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் திரவம் கே ஸ்டோரியம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மஞ்சள் நிற கேடோரியம் திரவம் beavers விலங்கினத்தின் சிறுநீர் வழியாக வெளியேறும். மிகவும் வாசனையுள்ள இந்த கேஸ் தோரியம் திரவம்தான் ஸ்டாபெரி புலவர் சுவைக்கு முக்கிய மூலக்கூறாக அமைகின்றது. இந்த கேஸ் டோர் எம் திரவமானது வாசனை திரவியங்கள் மற்றும் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படுகின்றது. ஸ்ட்ராபெர்ரி வாசனை மற்றும் சுவை கொண்ட பொருட்களின் இன்கிரிடியில் குறிப்பில் நேச்சுரல் ஃப்ளவர்ஸ் என்ற பட்டியலின் கீழ் கேஸ் டோரி எம் என குறிப்பிடப் பட்டுள்ளதை நீங்கள் காணலாம். அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பு இந்த கேடோரியம் திரவத்தை பாதுகாப்பான உணவு சேர்க்கையாக அறிவித்துள்ளது.


நீர் உரைந்து போவதை தடுக்கும் பொருட்டு கார் ரேடியேட்டர் களில் கூலன்ட் ஆக பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம் புரோபிலேன் கிளைகோல் என்பதாகும். இந்த ரசாயனம் மிகவும் ஆபத்தானது இது போதுமான அளவு நமது தோல் வழியாக உடலுக்குள் உறிஞ்சப் பட்டு விட்டாலும் கூட இதயம் கல்லீரல் சிறுநீரகம் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கு சேதத்தை விளைவித்து விடும். இந்த கொடிய ரசாயனம் தான் நாம் விரும்பி உண்ணும் ஐஸ்கிரீம்களின் கலக்கப்படுகிறது. இந்த இரசாயனத்தை கலப்பதால் ஐஸ்க்ரீமை எவ்வளவு குடித்தாலும் ஒருபோதும் பாறை போல் இறுகி விடுவதில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் ஐஸ்கிரீம் தயாரித்து பிரீசரில் வைத்தால் அது சிறிது நேரத்தில் பாறையைப் போல் இருகி விடுவதை காண்பீர்கள். ஐஸ்கிரீமை சப்பி சாப்பிடுவதற்கு பதிலாக கடித்து சாப்பிட வேண்டிய நிலை இருக்கும். ஆனால் ஐஸ்கிரீம் கடை களில் நாள் முழுவதும் ஃப்ரீஸரில் இருந்தாலும் ஐஸ்கிரீம்கள் எளிதாக கரண்டியால் அள்ளுவதற்கு இலகுவாக இருக்கும். இதற்கு காரணம் இந்த கொடிய புரோபிலேன் கிளைகோள் ரசாயனம்தான்.


வெண்ணிலா ஐஸ்கிரீம் அடடா என்ன டெஸட் எடுத்துக் கொள்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. வெண்ணிலா சுவையை செயற்கையாக உருவாக்கும் முறை ஐஸ்கிரீம் மட்டுமல்லாமல் சோடா,சாக்லேட்,தயிர் மற்றும் குக்கீஸ் உள்ளிட்ட செயற்கை வெண்ணிலா சுவையூட்டப்பட்ட உணவு பொருட்களையும் நாம் வாங்கி உண்கிறோம். வெண்ணிலா சுவையானது இயற்கையாக வெண்ணிலா பின் இன்னும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் தேவை மிகுதியால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க தற்போது வெண்ணிலா சுவையானது செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. வெண்ணிலா சுவை செயற்கையாக வனில்லின் எனும் ரசாயனத்தில் இருந்து பெறப்படுகின்றது. ஆரம்பத்தில் இது மரக்கூழ் தயாரிப்பின் போது கிடைக்கும் லிக்னைட் கழிவுப்பொருட்களில் இருந்து பெறப்பட்டது. வனில்லின் ரசாயனம் ஆனது தற்போது பெட்ரோலிய மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. நமக்கு பிடித்த வனிலா ப்ளேவர் ஐஸ்கிரீம் பெட்ரோலிய கெமிக்கல் தயாரிப்பு அதாவது நாமும் நமது காரம் ஒரே பொருளைத்தான் உண்ணுகிறோம்.

பைனாப்பிள் சுவை கொண்ட ஐஸ் கிரீம்களை தயாரிக்க நிஜப் பைனாப்பிள்களை பயன்படுத்துவார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நினைப்பில் மண் விழுந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் பைனாப்பிள் பிளவர் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருப்பது எத்தில் அசிட்டேட் இன்னும் ரசாயனமாகும். இந்த ரசாயனத்தை தான் சர்க்யூட் போர்டுகளை சுத்தம் செய்வதற்கும் நெயில் பாலிஸ் நீக்குவதற்கும் பெயிண்ட் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த ரசாயனத்தின் ஆவி கல்லீரல் நுரையீரல் இதயம் உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும். எனவே அடுத்த முறை பைனாப்பிள் பிளேவர் ஐஸ் கிரீம் சாப்பிடும் போது அதன் சுவை காரணமாக இருப்பது பைனாப்பிள் அல்ல எத்தில் அசிடிட்டி என்பதனை நினைவில் வையுங்கள்.


செர்ரி பிளவர் ஐஸ்கிரீம்களை தயாரிக்க ஆல்டிஹைடு சி17 அணிட ரசாயனத்தைப் படுத்துகின்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய இந்த ரசாயனம் ஆனது பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது.அமீல் அசிட்டேட் என்னும் ரசாயனம் வாழைப்பழ சுவையைப் பெற பயன்படுத்தப்படுகின்றது. இந்த ரசாயனம் ஆனது ஆயில் பெயிண்ட் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது. எப்படி ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கும் அதன் சுவை மணம் இடம் உள்ளிட்ட அனைத்து இருக்கவே ரசாயனத்தின் துணை கொண்டுதான் தயாரிக்கின்றனர். இத்தகைய நச்சுத்தன்மையுள்ள ரசாயன ஐஸ் கிரீம்களை தொடர்ந்து வாங்கி சாப்பிடுவதால் உடல் நலம் குன்றி ஐஸ் கிரீம்களை நோக்கிய நீங்கள் மருத்துவரை நாட வேண்டிய நிலைக்கு உள்ளாக நேரிடும் அளவுக்கு மிஞ்சினால் ஐஸ்கிரீம் களும் நஞ்சாகிவிடும் என்பதை மறக்க வேண்டாம்..

புலியை கூட வென்றுவிடும் 5 விலங்குகள்

 

ஒரு புலி சிங்கத்தை விட சக்தி வாய்ந்தது. ஆனால் சிங்கம் புலியை விட ஆபத்தானது. ஒரு சிங்கம் புலியை விட வலிமையானது. ஆனால் புலி சிங்கத்தை விட ஆபத்தானது. கேட்க சற்று குழப்பமாக இருந்தாலும் இதுதான் உண்மை அதாவது சிங்கம் மற்றும் புலி இடையே சண்டை ஏற்பட்டால் ஜெயிப்பது யார் என்பதைக் கூறுவது கடினம். ஏனெனில் சிங்கத்தை காட்டிலும் உடல் ரீதியாக வலுவாக இருக்கும் புலியை ஜெயிப்பது என்பது சிங்கத்திற்கு கடினமான காரியம். ஆனாலும் ஜெயித்து விடும் சாத்தியம் இருக்கிறது. ஒரு புலியை ஜெயிப்பது காட்டு ராஜாவாக இருக்கும் சிங்கத்திற்கு கடினமாக இருக்கும் போது மற்ற விலங்குகளுக்கு அது சாத்தியமே இல்லை என தோன்றலாம். ஆனால் புலியையும் ஜெயிக்கும் திறனுடன் 5 விலங்குகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதைப் பற்றி  பார்ப்போம்



CROCODILE


ஒருபுலியின் வழியில் முதலையோ அல்லது ஒரு முதலையின் வழியில் புலியோ பெரும்பாலும் குறிக்கிடுவதில்லை ஆனால் அது நிகழும்போது அது இருவருக்குமே மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஆகிவிடும். புலிகளைப் போலவே முதலைகளும் தன்னை நெருங்கும் வருடம் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் குணம் பெற்றவையாகும் தனது வலுவான பெரிய தடைகளால் இறையை இறுகப் பற்றிக் கொள்கிறது. பின்னர் அதனை முழுவதுமாக விழுங்கிவிடும். புலிகள் அவற்றின் நிறையை கண்டதும் முதலில் பதுங்கி பின்னர் இறையின் மீது பாய்ந்து அதன் கழுத்தில் அல்லது தலையின் பின்புறத்தில் ஒரு சக்தி வாய்ந்த கடியை வழங்கி கொன்று தின்கிறது. கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் சதுப்பு நிலக்காடு ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட புலியும் முதலையும் கடுமையான சண்டையில் ஈடுபட்டன. இரவு முழுதும் நீடித்த அந்த சண்டையில் ஒன்றையும்  ஒன்று மூர்க்கமாக கடித்துக்கொண்டன விடியும் வரை நடைபெற்ற அந்த சண்டையின் முடிவில் முதலையின் மூர்க்கமான கடியில் சிக்கி பலியானது. ஒரு முதலை புலியை வேட்டையாடி முதல் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவமாக இது கருதப்படுகிறது. 


PYTHON

தங்கள் இறையைத் உள்ள விஷத்தை பயன்படுத்துவதில்லை மாறாக அவை இறையை தங்கள் வலிமையான தசைகள் இறுகி கசக்கிக் கொண்டு பின்னர் மென்று தின்று விடுகின்றன. இந்த பாம்புகள் சுமார் 30 அடி நீளமும் 100 கிலோவுக்கும் அதிகமான எடை இருக்கும். புல்வெளிகள்,வனப்பகுதிகள்,சதுப்பு,நிலங்கள்,பாறைகள்,மலைகள்,குன்றுகள் மற்றும் புதர்கள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் வாழும் Python ஆசிய ஆபிரிக்கா ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.  பறவைகள் பள்ளிகள் பறவைகள் பன்றிகள் குரங்குகள் உள்ளிட்ட சிறு விலங்குகளை உணவாக உட்கொள்ளும் python புலி போன்ற பெரிய விலங்குகளை கொள்ளும் திறனை பெற்றிருக்கின்றன. காடுகளில் ஒரு Python சுருள் பிடிக்குள் மாட்டிக் கொள்ளும் புலியின் பெரும்பாலும் அதிலிருந்து விலகி விடும் அல்லது python -ன கொன்றுவிடும் அதே சமயம் pythonன் பிடிக்குள் வகையாக சிக்கும் புளியின் உயிரிழக்கும் சாத்தியமிருக்கிறது. 


COBRA


புலிக்கு கிளியே ஏற்படுத்தக் கூடிய மற்றொரு விலங்கு நாகப்பாம்பும் . இந்தியாவின் மழைக்காடுகளில் காணப்படும் நாகப்பாம்பும் அதன் சக்தி வாய்ந்த விஷத்தின் மூலம் நிறையையும் எதிரியையும் கொள்கிறது. பிற பாம்புகள் பல்லிகள் முட்டைகள் மற்றும் சிறு விலங்குகளை உணவாக உட்கொள்ளும் நாகப்பாம்புகள் தங்களை தாக்க வரும் எதிரிகளை விரட்ட அவற்றின்மீது விஷத்தை பீச்சி அடிக்கின்றன. விஷமானது எதிரியின் கண்களில் பட்டதும் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக எதிரி பின்வாங்கி ஓடி விடுகிறது. நாகத்தின் வழியில் குறுக்கிடும் ஒலிக்கும் இதே நிலைமை தான் முதலில் விஷத்தை பீச்சி அடித்து புலியின் வலி ஏற்படுகிறதா என்பதை பார்க்கும். புளி பின் வாங்காமல் இருந்தால் புளியின் மீது தனது விஷப் பற்களை பதித்து செலுத்துகிறது. விஷப்பாம்பு கடி வாங்கியதும். புலி பதற்றம் அடைகிறது. இதன் விளைவாக விஷத்தின் பரவல் அதன் உள் உறுப்புகளை விரைவாக அடைகிறது. இதன் விளைவாக புலியின் உள்ளுறுப்புகள் மற்றும் சிறுநீரகங்கள் மீளமுடியாத சேதத்தை அடைந்து மரணத்திற்கு வழிவகுக்கிறது.


HUMP NOSED PIT VIPER 

 ஒரு புலியையோ கொள்ளும் அளவுக்கு விஷத்தை கொண்டுள்ள இந்த HUMP NOSED PIT VIPER பாம்புகள் இந்தியாவின் அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன. வங்காளப் புலி மற்றும் HUMP NOSED PIT VIPER ஆகிய இரண்டுமே தென்னிந்தியக் காடுகளில் வசிக்கின்றன இவை இரண்டுமே இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் இயல்புடையவை ரெட்டில் பாம்புகளைப் போலவே இந்த HUMP NOSED PIT VIPER பாம்புகளும் தங்கள் அருகே வரும் எதிரியை உணரும்போது  வாலை அசைகின்றன.  இந்த பாம்புகள் மிகவும் மெதுவாக நகரும் என்ற போதிலும் அதிவிரைவாக கடிக்கும் திறன் உடையவை அச்சுறுத்தப்படும் போது ஆக்ரோஷமான சைகைகளை வெளிப்படுத்தும் இந்த HUMP NOSED PIT VIPER இந்தியா மற்றும் இலங்கையில் மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விஷப் பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


TIGER


ஒரு புலியை கொள்ளும் திறன் படைத்த மற்றொரு விலங்காக மற்றும் ஒரு புலியை கூறலாம். இது சற்று வினோதமாக தெரிந்தாலும் வலிமை வாய்ந்த விலங்கான ஒரு புலியை கொள்ளும் திறன் அதே வலிமையுடன் இருக்கும் மற்றொரு புலிக்கு இருக்கிறது. புலிகள் தனி உயிரினங்கள் அவை வனப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்கின்றன. அவை தங்களுக்கு சொந்தமான இடத்தில் அந்நியர்களை அனுமதிப்பதில்லை தங்களது இடத்தை அணுகி வரும் அன்னியர் மற்றொரு புலியாக இருந்தாலும் அனுமதிப்பதில்லை மீறி வரும் அன்னிய புலிகளுடன் ஆக்ரோஷமாக சண்டை இட்டு தங்களது உரிமையை நிலைநாட்ட முனைகின்றனர். சில சந்தர்ப்பங்களில் புலிகளுக்கு இடையே ஏற்படும் இந்த நில அபகரிப்பு சண்டையில் ஒரு புலியின் உயிரிழப்புக்கு வழி வகுத்து விடுகிறது.வெற்றி பெறும் ஒளி அப்பகுதியின் பெண் புலிக்கு கணவராகவும் புலிகளுக்கு தந்தையாகவும் பதவி ஏற்றுக் கொள்கிறது.


ஐபிஎல் போட்டியில் விளையாட நாளை துபாய் செல்கிறது சென்னை அணி

ஐபிஎல் போட்டியில் விளையாட நாளை துபாய் செல்கிறது சென்னை அணி


ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை துபாய் செல்கிறது. ஹர்பஜன் சிங் தாமதமாக செல்ல உள்ளார்.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.


இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மதியம் துபாய்க்கு புறப்பட்டு செல்கிறது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். 180 பேர் செல்லக்கூடிய விமானத்தில் 60 பேர் மட்டுமே பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.


நாளை துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன், அணியின் முன்னணி வீரரான ஹர்பஜன் சிங் செல்ல மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்து அவர் துபாய் செல்வார் என தெரிகிறது

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்- தமிழக அரசு வேண்டுகோள்

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்- தமிழக அரசு வேண்டுகோள்


பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.


தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.

* தமிழகத்தில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்க, ஊர்வலம் செல்ல தடை தொடருகிறது.

* கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

* மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாட்டுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டும் அரசின் ஆணையை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது.

* மத்திய, மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுரை


சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுரை


-பாஸ் எளிமை ஆக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தினமும் www.allinknow.com

என்ற இனைய தலத்தை பார்க்கவும்
https://bit.ly/2Q7JnDe

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்த்திற்கு செல்ல இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சரியான காரணம் இருந்தால் மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டது.


இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் எனத் கூறி இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினத்தில் இருந்து இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டது. இ-பாஸ் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.


இதனால் சென்னையில் இருந்து சென்றவர்கள் மீண்டும் வேலைக்காக சென்னை வரத்தொடங்கியுள்ளனர். முதல்நாளிலேயே ஏராளமானோர் சென்னை வந்தடைந்தனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அப்படி வந்தால் மீண்டும் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.


இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது

கொரோனா குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்


கொரோனா குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு https://bit.ly/2Q7JnDe

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நடைமுறை தொடரும் என்றும் அதில் மாற்று வழிக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான சுவாரஸ்யமான எல்லை

 கனடாவும் அமெரிக்காவும் பரப்பளவு அடிப்படையில் முறையே உலகின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய நாடுகளாக இருக்கின்றன. இந்த இரு நாடுகளும் 8891 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிக நீளமான சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கின்றனர்.

   அமெரிக்காவின் 13 மாகாணங்கள் கனடா ஒரு எல்லையை பகிர்ந்து கொள்ள கனடாவின் 8 பிரதேசங்கள் அமெரிக்காவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றனர். இது போன்ற இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களையும் அமெரிக்கா கனடா இல்லை கொண்டிருக்கிறது. அவை என்னென்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.



AIRPORT BETWEEN TWO COUNTRIES


 ஒரு நாட்டின் எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையத்தின் ரன்வே முழுதுமாக அந்த நாட்டின் எல்லைக்குள் தான் அமைந்திருக்கும். அதுதான்  சரியானதும் பாதுகாப்பானதும் கூட ரன்வே  அடுத்த நாட்டின் எல்லைக்குள் எடுத்துச் சென்றால் அங்கிருக்கும் அந்நாட்டு ராணுவத்தினர் துவம்சம் செய்து விடுவார்கள். ஆனால் இதற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் இடையிலான எல்லை விதிவிலக்கு ஏனெனில் அமெரிக்கா கனடா எல்லையில் 6 விமான நிலையங்கள் இருக்கின்றன. அந்த விமான நிலையங்களின் ரன்வே கல் ஒரு நாட்டின் எல்லைக்குள் தொடங்கி மற்றொரு நாட்டின் எல்லைக்குள் முடிவடைகின்றன. இப்படிப்பட்ட எல்லை கடந்து போகும் விமான நிலைய ரன்வே கல் உலகில் வேறு எங்கும் இல்லை.


LONGEST UNPROTECTED BORDER 

நாடுகளின் எல்லை என்றாலே அங்கு கட்டாயமாக இருக்கும் தொல்லை. ஆனால் அமெரிக்கா கனடா எல்லையில் இல்லை எந்தவித தொல்லை. உலகிலேயே ராணுவ பாதுகாப்பு ஏதுமில்லாத மிக நீண்ட எல்லை அமெரிக்காவும் கனடாவும் பகிர்ந்துகொள்ளும் எல்லையாகும். அதே நேரத்தில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக மாமியார் வீட்டுக்குள் நுழைவது போல சுலபமாக எல்லை தாண்டி போக முடியாது. ஏனெனில் எல்லையில் கஸ்டம்ஸ்செக் பாயிண்ட் இருக்கின்றன. கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் முறையாக டாக்குமென்ட்களை சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின்னர்தான் எல்லையை கடக்க முடியும். இல்லை என்றால் 5 ஆயிரம் டாலர்கள் அபராதமும் அல்லது சிறை தண்டனையும் கிடைக்கும்.


ILLEGAL TUNNEL

  குறைந்தது ஒரு சட்டவிரோத சுரங்க பாதையை கொண்டுள்ள உலகின் ஒரே எல்லை அமெரிக்கா கனடா எல்லைதான். எல்லை பாதுகாப்பு இல்லை என்பதால் சட்டவிரோத ஆசாமிகள் சுரங்கம் அமைத்து எல்லை கடக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு முறை மூன்று கனடியர்கள் 360 அடி நீளம் சுரங்கம் அமைத்து எல்லை தாண்டி போதைப்பொருள் கடத்திய கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயத்தில் அமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் சட்டபூர்வமான சுரங்கப் பாதைகளும் பிரிவுகளும் இருக்கின்றன. உரிய அனுமதியோடு மக்கள் சுரங்கப் பாதை மற்றும் பிரிட்ஜ் மூலமாக இரு நாடுகளுக்கும் சென்று வரலாம். இப்படிப்பட்ட சுரங்கப் பாதைகளில் குறிப்பிடத்தக்கது DETROLT WINDSOR TUNNAI ஆகும். இது அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தையும் கனடாவின் ஒன்ராரியோ பிரதேசத்தையும் இணைகிறது. மற்றொன்று அம்பாசிடர் பிரிட்ஜ் நீண்ட ஆற்றுப் பாலம் இது அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தையும் கனடாவின் ஒன்ராரியோ வையம் இணைக்கிறது.


ONE WAY BORDER CROSSING


 அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே 119 சட்டபூர்வமான BORDER CROSSING இருக்கின்றன. அவற்றில் இரண்டு BORDER CROSSING ONE WAY BORDER CROSSING  மட்டுமே இருக்கின்றன. அவை இண்டியானா மாகாணத்தில் சுருபுஸ்கோ மற்றும் நியூயார்க் ஆகும். இந்த இரண்டு BORDER CROSSING-கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய வழி வகுக்கின்றன. ஆனால் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குள் நுழைய முடியாது. அதே போல் அமெரிக்காவின் MAINE மாகாணத்தின் போட்பீல்டு நகரிலிருந்து கனடாவின் நியூ பிருன்ஸ்விக் மாகாணத்திலுள்ள போர்பல்செக்கு போக மட்டுமே முடியும். திரும்ப வர முடியாது.


NO TOUCHING ZONE

 

 அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லையில் அமைந்திருக்கும் காடுகளில் உள்ள மரங்களை ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வெட்டி 20 அடி அகலத்திற்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்த இடைவெளியானது a visibieline between friendly neighbours என்று இந்த இடைவெளி அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து பசுபிக் பெருங்கடல் வரை நீண்டுள்ளது. 1908 ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட இன்டர்நெட்டில் பவுண்டரி கமிஷன் எனப்படும் ஆணையத்தின் மூலம் இந்த எல்லைக்கோடு பராமரிக்கப்படுகிறது.




இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த TAMILBOOSTER.IN வலைப்பக்கத்தை தொடர்ந்து ஆதரவு செய்யவும்.


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்



ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது.

இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அரிராகவன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, தூத்துக்குடியின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சுமார் 1,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

www.allinknow.com

தேள்களை பற்றி 15 தகவல்கள்


தேள் என்றால் என்ன?

தேள் என்பது கணுக்காலிகள் பிரிவை சேர்ந்த உயிரினமாகும். ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும் தேளின் வால் நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டுள்ளது.முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிக்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன. தேள்கள் பற்றிய தகவல்கள் அவை எவ்வளவு ஆபத்தானவை என்பதை நமக்குத் தெரியப்படுத்தி உதவு கின்றன. அப்படிப்பட்ட 15 தகவல்களைப் பற்றி இப்போது பார்ப்போம் .


இதுவரை அறிந்த வரையில் இவ்வுலகில் பதிமூன்று குடும்பங்களுடன் சுமார் 2000 வெவ்வேறு இடங்கள் உள்ளன. கிட்டதட்ட அனைத்து தேள்களுமே விஷத்தன்மை வாய்ந்தவை தான் என்றாலும் அவற்றில் சுமார் 25 தேள் இனங்கள் மட்டுமே ஒரு மனிதரை கொல்லும் அளவிற்கு அதிக விஷத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன.



15 தகவல்கள்...

  1.  தேள்கள் நீண்ட ஆயுள் காலத்தை கொண்டிருக்கவில்லை காடுகளில் வாழும் தேள்களின் சராசரி ஆயுட்காலம் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
  2. வெப்ப மண்டல மழை காடுகள் மலைகள் மற்றும் புல்வெளிகள் உள்ளிட்ட உலகின் எந்த ஒரு நிலப்பரப்பில் வாழும் திறனுடையது தேள்கள் அண்டார்டிகாவை தவிர்த்து மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.
  3. உணவு அரிதாக கிடைக்கும் சூழ்நிலைகளில் தேள்கள் அவற்றின் வளர்சிதை மாற்றத்தை குறைத்துக் கொள்ளும்.
  4. தேள்களால் ஒரு வருடம் வரை உணவின்றி உயிர் வாழ முடியும்.
  5. தேள்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன.  மிகச்சிறிய தேள்கள் இனங்கள் சுமார் 9 மில்லி மீட்டர் நீளம் கொண்டவை அதே நேரத்தில் மிகப்பெரிய தேள்கள் இனங்கள் சுமார் 20 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியவை.
  6. தேள்களுக்கு ஆறு முதல் பன்னிரண்டு கண்கள் வரை இருக்கின்றன. இருப்பினும் அவற்றின் பார்வை திறன் என்னவோ மிகவும் குறைவுதான் இதனை ஈடு செய்ய தேள்கலுக்கு அவற்றின் அடி வயிற்றின் அடிப்பகுதியில் pectines எனப்படும் உணர்ச்சி உறுப்புகள் உள்ளன.இந்த pectines பிற தேள்கள் விட்டுச்சென்ற வாசனை தடங்களையும் சுற்றியுள்ள காற்று இயக்கத்தையும் கண்டறிய உதவுகின்றன.
  7. தேள்கள் இரவு நேரத்தில் நடமாடும் உயிரினம் என்றாலும் அவை இரவு நேரத்தில்கூட உணவு தேடிச் செல்வதில்லை. மாறாக அவை அவற்றின்  இறைஅருகே வரும் வரை காத்திருந்து பிடித்து உண்ணும் இயல்புடையவை விருப்ப உணவு சிலந்தி உள்ளிட்ட பூச்சியினங்கள் ஆகும். 
  8. தேள்ளின் குட்டிகள் காஸ் பிளைன்ஸ் என்று அழைக்கப் படுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட காலம் வரை தாயின் முதுகில் அமர்ந்து சவாரி செய்யும்.
  9. பெண் தேள் ஆண் தேள்களை விட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் பெண் தேள்கள் ஆண் தேள்களுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்ட பின்பு ஆண் தேள்களைக் கொன்று தின்றுவிடும்.
  10. தேள்கள் எப்போதும் தங்கள் பிடிக்கும் இரையை முடிந்த வரை தங்கள் முன்புற கொடுக்கு களால் அடக்கி கொள்ளவே விரும்புகின்றனர். அது முடியாத பட்சத்தில் தான் பின்பகுதி வால் கொடுக்க இருக்கும் இடத்தை பயன்படுத்திக்கொள்ளும் ஏனெனில் ஒரு முறை விஷத்தை வெளியேற்றினால் புதிய விஷம் சுரக்க சுமார் ஒரு வாரகாலம் அல்லது அதற்கும் மேல் ஆகும். எனவே தேள்கள் தங்கள் விஷத்தைப் இழக்க விரும்புவதில்லை.
  11. உலகின் மிகவும் ஆபத்தான தேள்கள் இந்தியாவில் காணப்படும் செந்தேள்களும் இஸ்ரேலிய மஞ்சள் தேள்களும் கருதப்படுகின்றன.
  12.  இவை கொட்டினால் தாங்க முடியாத அளவில் ஏற்படும் வலியைத் தொடர்ந்து மரணம் சம்பவிக்கலாம்.
  13. தேளின் விஷம் மருந்துத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேள்களுக்கு நிறைய தேவை இருப்பதால் அவை சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு மருந்து நிறுவனங்களிடம் விற்கப்படுகின்றன. உதாரணமாக பாகிஸ்தானில் உள்ள டாட்டா மாவட்ட விவசாயிகள் பிடித்துக் கொடுக்கும் ஒவ்வொரு 40 கிராம் அளவிலான தேள்களுக்கு சுமார் 7000 ரூபாய் வழங்கப் படுகின்றது. 
  14. சீனாவின் சில பகுதிகளில் ஃப்ரைடு சிக்கன் விற்கப்படுவதை போல ஸ்கார்பியன் விற்கப்படுகின்றன. தேள்லை வறுத்து சாப்பிடுவது அவர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும் மேலும் சீன மருத்துவத்தில் தேள் ஒயின் வலி நிவாரணியாகவும் மற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. 
  15. ஒரு தேள் அதன்  முழுமையான வளர்ச்சியை அடைவதற்கு ஏழுமுறை தோல் உரிக்கிறது. தேள் அதன் தோலை உரித்த முதல் ஒரு மணி நேரத்தில் ஒரு சிறிய தாக்குதலையும் தாங்காது ஏனெனில் அவற்றின் புதிய பாதுகாப்பு தோல் கடினம்மாவதற்கு சிறிது நேரம் பிடிக்கும் 





Allinknow More news wanted

 மேலும் அனைத்து செய்திகளும் 

 https://www.allinknow.com/ 


மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நீட் தேர்வுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு



மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நீட் தேர்வுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி: மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால், கொரோனா பாதிப்புக்காக நடப்பாண்டு நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை என்ற அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய் தொற்று காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வை வரும் செப்டம்பர் 13ம் தேதியும், அதேப்போல் ஜே.இ.இ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடத்தப்படும் என கடந்த மாதம் தேர்வு முகமை அமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளா உட்பட நாடு முழுவதிலும் உள்ள 11 மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகமாகி வரும் சூழலில் நீட் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது என்பது சரியான ஒன்று கிடையாது. மேலும் வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தினால் மாணவர்கள் அனைவரும் தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, கொரோனா நோய் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்த பிறகு தேர்வை நடத்த வேண்டும். மேலும் இதுகுறித்து கடந்த ஜூலை 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையையும் ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இதைத்தவிர நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்ட உத்தரவை நீக்கிவிட்டு மாவட்டத்திற்கு ஒன்று என கூடுதல் மையங்களை உருவாக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ‘நீட் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும். நாடு முழுவதும் தற்போது 3ம் கட்ட தளர்வு வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் நீட் தேர்வை எழுத அச்சப்படத் தேவையில்லை. மேலும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் கொண்டது என்பதால் இந்த தேர்வை ஆன்லைனிலும் நடத்த இயலாது’ என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி அருண்மிஸ்ரா, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பு வாதத்தில்,”மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் தேர்வு நடத்தப்படும் அனைத்து இடங்களும் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஒருவேளை தேர்வு நடத்தப்படும் பட்சத்தில் மாணவர்கள் அங்கு சென்றால் வைரஸ் தொற்று அச்சம் தான் வரும். அவர்களால் தேர்வில் கவனம் செலுத்த முடியாது என்பதால் நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிடப்பட்டது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில்,”மாணவர்கள் நீட் தேர்வை கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் அனைத்து தேர்வு மையங்களிலும் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி உட்பட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படும். அதுதொடர்பான அனைத்து பணிகளையும் அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை மேற்கொண்டு வருகிறது’’ என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் ஒரு வருடத்தை வீணாக்க மாணவர்களாகிய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இது உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒன்றாகும். கொரோனாவை காரணம் காட்டி நமது வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் மூடிவைக்க முடியுமா? இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் கூட தான் செயல்பட்டு வருகிறது. அதனை ஏன் என்று கேள்வியெழுப்ப முடியுமா? குறிப்பாக நேரடி விசாரணை நடத்த வேண்டும் என இங்கேயே பல வழக்குகள் தொடரப்படவில்லையா?

மேலும் இக்கட்டான சூழலை தேர்வு நடத்தும் அதிகாரிகளும் கண்காணித்து தான் வருகின்றனர். அதனால் எந்த ஒரு நிலையிலும் வாழ்க்கையின் ஓட்டத்தோடு நாம் பயணிக்க தயாராக இருக்க வேண்டும். தேர்வு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு செய்வது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கண்டிப்பாக பாதிக்கும் என்பதால், நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்து, மாணர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

* ஆயுஷ் நுழைவு தேர்வு ரத்து கோரி மனு

அனைத்து இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவு தேர்வை ஒத்தி வைக்கக் கோரி, ஆயுர்வேதம், ஹோமியோபதி இளங்கலை மருத்துவப் படிப்பை முடித்த 17 மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், ``தற்போது நாட்டில் உள்ள பல்வேறு கொரோனா மருத்துவமனைகளில் முன்களப் பணியாளர்களாக பணி புரிந்து வருகிறோம். தேர்வு எழுதுவதற்காக நாங்கள் புறப்பட்டால், விதிமுறைகளின்படி 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். நாட்டில் தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். இதனால், ஆகஸ்ட் 29ம் தேதி நடத்தப்பட உள்ள நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.


தினமும் www.allinknow.com


என்ற இனைய தலத்தை பார்க்கவும்

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!


ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, வேதாந்தா குழுமத்தின் சார்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.


தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, கடந்த 2018 மே மாதம் 28 -ந் தேதி அந்த ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது.

தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலின் விசாரணை அறிக்கையில், அந்த ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டதை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்தது

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

அதன்படி, ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, 39 நாட்களாக நடந்த விசாரணையின் முடிவில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்தவழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு இன்று வழங்குகிறது.



தினமும் www.allinknow.com

என்ற இனைய தலத்தை பார்க்கவும்


தண்ணீரே குடிக்காமல் ஆண்டுக்கணக்கில் வாழும் உயிரினங்களைப் பற்றி பார்ப்போம்

 

Animals that survive without drinking water

கால நிலையை பொருத்து ஒரு மனிதன் சராசரியாக மூன்று நாட்கள் மட்டுமே தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ முடியும். ஏனெனில் மனித உடல் வியர்வை சுவாசம் மற்றும் கழிவுகள் மூலமாக கணிசமான அளவு தண்ணீரை இழக்கிறது. கடுமையான பாலைவன சூழல்களில் மனிதனாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை சுவாசம் மற்றும் கழிவுகள் மூலம் வெளியேறும் தண்ணீரின் ஒவ்வொரு துளியும் டீஹைடிரேஷன் ஏற்படுகிறது இறந்து  போவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால் அத்தகைய பாலைவன சூழல்களிலும் சில மிருகங்கள் தண்ணீரே குடிக்காமல் ஆண்டுக்கணக்கில் அசால்டாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த மிருகங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்


KANGAROO RAT


kangaroo Rat என்பது வட அமெரிக்காவின் பாலைவன சூழலில் வாழும் ஒரு சிறப்பு வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இது அதன் வாழ்நாள் முழுதும் கூட தண்ணீரே குடிக்காமல் வாழும் திறனை பெற்றுள்ளது. கங்காருகலுக்கு இருப்பதைப் போல நீண்ட பின்னங்கால்கள் மற்றும் குறுகிய முன்னங்கால்களை கொண்டிருப்பதாலும்  கங்காரு களை போலவே தாவி குதிப்பதை இந்த எலி கங்காரு எலி என்றழைக்கப்படுகிறது. கடுமையான பாலைவன சூழலில் வாழ்வதற்கு ஏற்ப இந்த எலியை சில உடல் சிறப்பம்சங்களை கொண்டு இருக்கிறது. அதாவது இதன் கன்னங்களில் உணவுகளை சேமித்துக் கொள்வதற்கு வசதியாக  பைகள்அமைந்திருக்கின்றன. தேவைக்கு அதிகமாக கிடைக்கும் உணவுகளை இந்த கண்ண பைகளில் சேமித்து கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார். மேலும் இந்த ஏறி கூடுதல் குழாய்களைக் கொண்ட மிகவும் சிறப்பு வாய்ந்த சிறுநீரகங்களை கொண்டுள்ளது. இவை சிறுநீரில் இருந்து நீரை பிரித்து எடுப்பதன் மூலம் உடலில் உள்ள நீரை பாதுகாக்க உதவுகின்றன. கங்காரு எலியின் சிறுநீரானது மனித சிறுநீரை காட்டிலும் ஐந்து மடங்கு செறிவு மிக்கது. உடலில் எண்ணெய் கிசுகிசுப்பான ரோமத்தை கொண்டுள்ள கங்காரு எலிக்கு வியர்க்காது. இதனால் கங்காரு எலியினால் நீண்ட நேரம் உடல் வறட்சி இன்றி இருக்க முடிகிறது. மேலும் கங்காரு எலியின் அவற்றின் வலைக்குள்  பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் விதைகளை உண்கின்றன. ஒருமுறை உட்கொண்ட விதைகள் வளர்சிதை மாற்றம் அடைந்து ஆற்றலையும் நீரையும் தருகின்றது. மேலும் இந்த எலிகளின் தனித்துவமான நாசி பாதையில் உடலில்  இருந்து ஈரப்பதம் அதிக அளவில் வெளியேற்றுவதை தடுக்கிறது. இதனால் எலியின் உடல் எப்போதும் நீரேற்றம் குறையாமல் இருக்கிறது.


WATER HOLDING FROG


வாட்டர் ஹொல்டிங் ப்ராக் என்பது ஆஸ்திரேலியாவின் பாலைவனப் பகுதிகளில் காணப்படும் ஒரு வகை தவளை இனம் ஆகும். இந்த தலையானது கடுமையான பாலைவன சூழலில் வாழ்வதற்கு தேவையான சில விசேஷ உடல் கூறுகளை கொண்டுள்ளது. அதாவது இந்த தவறை ஈரப்பதமான காலத்தில் ஒரு சாதாரண தவளையை போல வாழ்கிறது. கடுமையான வெப்பமும் வறட்சியும் நிலவும் காலத்தில் மண்ணுக்குள் வளையம் கொண்டு வாழ்ந்து வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்கிறது. இந்த தலையானது அதன் தோல் வழியாக கணிசமான அளவு தண்ணீரை உறிஞ்சும் தனித்துவமான திறனை பெற்றுள்ளது. தோலின் வழியாக உறிஞ்சப்படும் தண்ணீர் பின்னர் அதன் சிறுநீர்ப்பை மற்றும் உடல் திசுக்களில் சேமிக்கப்படுகிறது. வெப்ப காலத்தில் மண்ணுக்குள் வலை அமைத்து மறைந்து கொள்ளும் இந்த தவறை அதன் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை இழக்காமல் இருக்க அதன் தோலின் மீது ஒருவித கூட்டை உருவாக்கிக் கொள்கிறது. இந்த நிலையின் போது தவளை அதன் தோலை ஏன் உணவாக உட்கொள்கிறது. எனவே வாட்டர் ஹொல்டிங் பிராக் எனப்படும் இந்த தவறை அதன் வலைக்குள் உணவு தண்ணீர் இன்றி பல ஆண்டுகள் கூட உயிர் வாழ முடியும்.



WAST AFRICAN LUNGFISH


ஆப்பிரிக்கன் எனும் மேல் நிஜமாகவே ஒரு அதிசயம் தான் இந்த தனித்துவமான மீன்கள் வரலாற்றுக்கு முந்தைய கால மீன்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை கிட்டத்தட்ட 400 மில்லியன் ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். விஞ்ஞான வட்டாரங்களில் லிவிங் பாஸில்ஸ் என்றழைக்கப்படும் இந்த மீன்கள் மனுஷன் எனப்படும். ஹைபர் நேஷனல் உறக்க நிலையை ஒத்த எஸ்ஹிபிஷன் எனப்படும் செயல்முறையின் மூலம் தங்கள் இருப்பை பல நூற்றாண்டுகளாக தக்க வைத்திருக்கின்றனர். லங்பிஸ் எனப்படும் இந்த மீன்கள் மற்ற மீன்களைப் போலவே தண்ணீரில் இருந்து ஆக்சிஜனை பெறுவதற்கு பயன்படும் செவிகளை கொண்டிருக்கின்றன. ஆனால் லங்பிஸ் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பெற்றுக்கொள்ளும் தனித்துவமான திறனை பெற்றுள்ளது. வரண்ட சூழ்நிலைகள் உருவாகும் போது இந்த மீன்கள் சேருகளை வலை அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். சேரு காய்ந்த பிறகும் கூட அதனுள் தொடர்ந்து வாழ இந்த மீன்களால் முடியும். எஸ்டிமேஷன் எனப்படும் உரக்க நிலையின் போது தங்கள் உடல் மீது சரியான ஒரு கூட்டை உருவாக்கிக் கொண்டு கடுமையான வறட்சி சூழ்நிலையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். எந்த காலகட்டத்தில் ஊட்டச் சத்துக்களை பெற அவற்றின் தசை திசுக்கள் ஜீரணத்தை கொள்கின்றன இதே நிலையில் இந்த மீன்களால் உணவு தண்ணீரின்றி சுமார் ஐந்தாண்டு காலம் வரை உயிர் வாழ முடியும்.




THORNY DEVIL


 என்பது உடலில் முட்களை கொண்ட ஒரு பல்லி இனம் ஆகும். ஆசிய பாலைவனங்களில் பரவலாக காணப்படும் இதனை THORNY TRACKON எனவும் அழைக்கிறார்கள். இந்த THORNY DEVIL  பல்லிகள் அதனுடன் உடலில் காணப்படும் முற்கள் இடையில் இருக்கும் இடைவெளி களின் மூலம் மழைத்துளி மற்றும் பனித்துளியை சேகரிக்கின்றன. சேகரிக்கப்பட்ட இந்த நீர் பின்னர் தோலின் கீழ் இழுக்கப்பட்டு அங்கிருந்து வாய்க்கு கொண்டு செல்லப்படுகிறது. வாயின் பின்பு தண்ணீரை எடுக்க தேவையான அழுத்தத்தை உருவாக்கும் நாக்கு இயக்கங்களால் இந்த செயல்முறை செயல்படுத்தப்படுகிறது.



DESERT TORTOISE


 என்பது தென்மேற்கு அமெரிக்காவிலும் வடமேற்கு மெக்சிகோவிலும் காணப்படும். மோ சாவி மற்றும் சோலோவான் பாலைவனங்களில் காணப்படும் ஒருவகை பாலைவனமாகும். இந்த பாலைவன ஆமைகளின் ஓடுகள் பாறையைப் போன்று கடினமானது மற்றும் பெரிய அளவில் நீர் சேமிப்பு திறன் கொண்டது. இந்த ஆமைகள் மிகவும் பெரிதான சிறுநீர்ப்பையை கொண்டிருக்கின்றன. இந்த சிறுநீர்ப் பையானது ஆமையின் நிலையில் 5/2 பங்கு அளவுக்கு நைட்ரஜன் சார்ந்த கழிவுகள் மற்றும் தண்ணீரை சேமிக்கும் திறன் உடையது. ஈரப்பதமான காலங்களில் கழிவுகளை வெளியேற்றி தண்ணீரை தேவைக்கு அதிகமாக குடித்து சேமித்துக் கொள்கிறது. சேமிக்கப்பட்ட இந்த தண்ணீரை கொண்டு 1 முதல் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வரை இந்த ஆமைகள் தண்ணீரே குடிக்காமல் உயிர் வாழ முடியும் ஆனால் பயத்தின் காரணமாக வெளியேறும் சிறுநீர் மூலம் இந்த ஆமையின் நீர் சேகரிப்பு வெளியேறிவிட்டால் இவை வறண்ட பாலைவன சூழலில் தண்ணீரின்றி தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம்.


THE SPADEFOOT TOAD


 என்பது அமெரிக்காவின் கொலராடோ பாலைவனத்தில் காணப்படும் ஒருவகை தேரை இனமாகும் இந்தத் தேரைகள் கடுமையான பாலைவன சூழலை தழுவிக்கொள்ளும் மிகச் சிறந்த உடல் அம்சங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் மணல் குன்றுகளில் விளிம்புகள் மற்றும் மிகவும் வறட்சியான இடங்கள் உள்ளிட்ட சில கடுமையான பகுதிகளில் இந்த தேரைகளால் உயி வாழ முடிகிறது. மணல் குன்றுகளில் வாழும் THE SPADEFOOT TOAD தேரைகள் மணல் குன்றில் ஈரமான அடியில் புதைந்து முழு வருட காலத்திற்கும் அங்கேயே இருக்கும் முதிர்ச்சியடைந்த தேவைகளில் தோலில் பல அடுக்குகள் இருக்கின்றன இதனால் அவற்றின் உடலில் உள்ள ஈரப்பதம் அவ்வளவு சுலபமாக வெளியேறுவதில்லை. மேலும் இந்தத் தேவைகளின் அதிக ஆஸ்மா டிக் செறிவு தண்ணீரை தக்க வைத்துக் கொள்ளும் திறனை பெரிதும் ஆதரிக்கிறது. இவற்றால் THE SPADEFOOT TOAD  தேரைகள் ஆண்டு கணக்கில் தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும்  டீகைடட் ஆவதில்லை. இந்த தேரைகள் விரைவான வளர்ச்சி விகிதத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த தேரையின்  முட்டைகள் 48 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும். மேலும் முட்டையில் இருந்து வெளிவரும் தலைபிரட்டை களுக்கு அடுத்த பத்து நாட்களுக்குள் கால்கள் முளைத்து விடுகின்றன மூன்று மாதங்களுக்குள் இளம் தேரைகள் வயதுகளின் பாதி அளவுக்கு வளர்ந்து விடுகின்றன.


தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை


தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை

நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள்

பல லட்சம் பேரின் தியாகத்தால் உருவானது சுதந்திர தினம்

விடுதலைக்காக தியாகங்களை செய்தவர்களை இன்று நினைவுகூர்வோம்

இன்று கண்ணெதிரே சின்ன சின்ன குழந்தைகளை காண முடியவில்லை.

கொரோனா அனைவரையும் வீட்டுக்குள் தடுத்து விட்டது

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பாராட்டுவோம்

பலர் தங்கள் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்

130 கோடி மக்களின் சகிப்புத்தன்மையும் உறுதியும் கொரோனாவை வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நாட்டின் பல பகுதிகளில் மக்கள் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஒரே நாடு என்ற ஒற்றுமையுணர்வுடன் நாம் சவால்களை வெல்வோம்

அடுத்த ஆண்டு நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.

அடுத்த ஆண்டு நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.

எதிர்காலத்திற்கான புதிய கண்ணோட்டம் வேண்டும்.

புதிய சபதங்களையும் நாம் ஏற்க வேண்டும்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை என்றும் நிரந்தரமாக ஆள கனவு கண்டார்கள்

இந்தியாவின் பலம் அதன் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டில் உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நமது ஒற்றுமையுணர்வை குறைவாக மதிப்பிட்டனர்

பிரிட்டனின் விரிவாக்க கனவை இந்தியா ஒற்றுமையால் முறியடித்தது.

இந்தியர்கள் ஒருபோதும் தியாகத்திற்கு அஞ்சியதில்லை

கொரோனாவை வெல்லவும் 130 கோடி இந்தியர்கள் உறுதி மேற்கொண்டுள்ளனர்.



மேலும் விவரங்களுக்கு ……..

https://bit.ly/3g3XMuH


👆 இந்த இனைய தலத்தைபபார்க்கவும்


தினமும் www.allinknow.com


என்ற இனைய தலத்தை பார்க்கவும்

கொரோனாவில் இருந்து மீளும் சென்னை....!! 3.34 லட்சம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்; மாநகராட்சி ஆணையர் தகவல்



கொரோனாவில் இருந்து மீளும் சென்னை....!! 3.34 லட்சம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்; மாநகராட்சி ஆணையர் தகவல்
https://bit.ly/3iJvJCx

சென்னை: சென்னையில், வீட்டு தனிமையில் 3.34 லட்சம் பேர் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. அதில் கொரோனா தொற்று இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா அறிகுறி இருந்தால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்தநிலையில் சென்னையில், 3.34 லட்சம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் என்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இதுவரை சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 பேரும், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் 5 லட்சத்து 82 ஆயிரத்து 750 பேரும், பரிசோதனை செய்தவர்கள் 4 லட்சத்து 55 ஆயிரத்து 976 பேரும், பயணம் செய்தவர்கள் 2 லட்சத்து 5 ஆயிரத்து 38 பேரும், காய்ச்சல் முகாமில் கலந்து கொண்டவர்கள் 97 ஆயிரத்து 334 பேர் என மொத்தம் 17 லட்சத்து 31 ஆயிரத்து 851 பேர் வீட்டு தனிமையை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 13 லட்சத்து 63 ஆயிரத்து 146 வீட்டு தனிமையை முடித்துள்ளனர். 3 லட்சத்து 34 ஆயிரத்து 792 பேர் தற்போது தனிமையில் இருந்து வருகின்றனர்.



உலகின் 7 அதிர்ஷ்டசாலிகளைப் பார்ப்போம்

7 LUCKY PEOPLE IN THE WORLD


ஒரு சிலருக்கு சில நேரங்களில் முற்றிலும் சாத்தியமே இல்லாத சில விஷயங்கள் தற்செயலாக நடப்பது உண்டு அவர்களை நாம் அதிர்ஷ்டசாலி என்கிறோம்.அப்படிப்பட்ட உலகின் மகா அதிர்ஷ்டசாலி ஆன ஏழு பேரை பற்றி இப்போது பார்ப்போம்.


LENA PAHLSSON


சுவீடன் நாட்டை சேர்ந்த Lena pahlsson என்னும் பெண் தான் அணிந்திருந்த திருமண மோதிரத்தை எப்படியோ தவற விட்டுவிட்டார். போகிறபோக்கில் எங்காவது கழன்று விழுந்து இருக்கலாம் அல்லது கிச்சன் சிங்க் கொள் விழுந்திருக்கலாம் என நினைத்த லீனா பால்சன் அப்போதைக்கு வருத்தப்பட்டு விட்டு அதனை மறந்து விட்டார். பின்னர் 16 ஆண்டுகள் கழித்து இருக்க தனது தோட்டத்தில் விளைந்த கேரட்டுகளை அறுவடை செய்ய lena pahlsson-க்கு அடித்தது அதிர்ஷ்டம் 16 ஆண்டுகள் முன்பு காணாமல் போன திருமண மோதிரத்தின் வழியாக ஒரு கேரட் வளர்ந்திருந்தது. அறுவடை செய்யப்பட்ட கட்டோடு அந்த மோதிரம் வந்தது. 


VIRGINIA FIKE

அமெரிக்காவை சேர்ந்தவர் VIRGINIA FIKE லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கம் உடைய இவர் எப்போதும் ஒரே மாதிரியான டிஜிட் காம்பினேஷன் உள்ள லாட்டரி சீட்டுகளை மட்டுமே வாங்குவார்.அதாவது முதல் நம்பர் அவரது பெற்றோருக்கு திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதை குறிக்கும் எண்ணாக இருக்கும் இரண்டாவது நம்பர் திருமணமாகும் போது அவர்களது வயது என்ன என்பதை குறிக்கும் நண்பராக இருக்கும் .இப்படிப்பட்ட விசித்திர நம்பர் காம்பினேஷனில் வாங்கிய லாட்டரி சீட்டுகள் பலமுறை தோல்வி விட்டாலும் கடந்த 2012ஆம் ஆண்டு  VIRGINIA FIKE வாங்கிய லாரிகளால் அவர் மல்டி மில்லியனர் ஆனார். அவர் வாங்கிய இரண்டு லாட்டரி சீட்டு களுக்கும் தலா 10 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக பெற்றார்.


TSTOMU YAMAGUCHI


ஜப்பானை சேர்ந்த TSTOMU YAMAGUCHI  தனக்கு எமன் அனுப்பிய சம்மனை இரண்டு முறை நிராகரித்த  அதிர்ஷ்ட சாலியாவர் அதாவது ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்குதல்களில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட போது TSTOMU YAMAGUCHI வியாபார நிமித்தமாக அங்குதான் இருந்தார் இருப்பினும் அணுகுண்டு வெடித்த இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால் TSTOMU YAMAGUCHI தீ காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் மூன்று நாட்கள் கழித்து ஹிரோஷிமாவில்லிருந்து தனது பணி இடமான நாகசாகி கவர்ந்தார் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட அதிலிருந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!TSTOMU YAMAGUCHI.


JOAN GINTHER

அமெரிக்காவைச் சார்ந்த JOAN GINTHER ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சேல்ஸ்  உமனாக ஆக பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆனால் அதிர்ஷ்டம் அவரது வீட்டுக்குள் கூரையைப் பிச்சுகிட்டு விழுந்ததால் விரைவிலேயே தனியாக பல சூப்பர் மார்க்கெட்டுகளில் திறக்கும் அளவுக்கு மல்டி மில்லியனர் ஆனார்.JOAN GINTHER அதிர்ஷ்டம் லாட்டரி ரூபத்தில் வந்தது. 1993 ஆம் ஆண்டில் JOAN GINTHER வழங்கிய லாட்டரிக்கு 54 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்தது. 2006 ஆம் ஆண்டு JOAN GINTHER துவங்கிய லாட்டரி சீட்டு 20 லட்சம் டாலர்களை பெற்றுக் கொடுத்தது. 2008 ஆம் ஆண்டு அவர் வாங்கிய லாட்டரிக்கு 30 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்தது. 2010 ஆம் ஆண்டில் வாங்கிய லாட்டரிக்கு 10 லட்சம் டாலர்களை பரிசாக பெற்றார். லாட்டரி சீட்டு மூலமாகவே இதுவரை இவர் 2 கோடியே 40 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.


MAARTEN DE JONGE

 நெதர்லாந்து நாட்டை சேர்ந்த MAARTEN DE JONGE என்பவர் ஒரு தொழில்முறை சைக்கிளிஸ்ட் ஆவார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலேசியா ஏர்லைன்ஸ் ஃபிளைட் 317 பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ தனது முன்பதிவை கடைசி நிமிடத்தில் கேன்சல் செய்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் போகவிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் ஃபிளைட் 317 இந்திய பெருங்கடலில் மர்மமான முறையில் காணாமல் போனது. அதில் பயணம் செய்த 239 பேரின் நிலை என்னவானது என்பது இன்று வரை தெரியவில்லை.MAARTEN DE JONGE கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்ததால் உயிர் தப்பினார். அதே ஆண்டு ஜூலை மாதம் மலேசியா ஏர்லைன்ஸ் ஸ்லைட் 17 பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார்MAARTEN DE JONGE. இந்த தடவையும் கடைசி நிமிடத்தில் தனது முன்பதிவை ரத்து அவர் ரத்து செய்தார். அவர் போக இருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 17 சுட்டு வீழ்த்தப்பட்டது.


FRANE SELAK

குரோஷியா நாட்டை சேர்ந்த பிரான்சில் என்பவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். இவர் எமனை ஏழு முறை ஏமாற்றிய ஏமாகாதராக என அறியப்படுகிறார். 1962இல் பணி காலத்தில் மலை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். பணியின் காரணமாக தண்டவாளத்தில் இருந்து வலிக்கு விலகிச் சென்ற ரயில் அருகே இருந்த ஆற்றில் விழுந்தது. ஆற்றில் மூழ்கியவரை காப்பாற்ற முடியாமல் போகும் FRANE SELAK யாரோ ஒருவரால் மீட்கப்பட்டு காயங்களுடன் உயிர் தப்பினார். அடுத்த ஆண்டு FRANE SELAK முதல் முறையாக விமானம் பயணம் மேற்கொண்டார். விமானம் கதவிலிருந்த பழுது காரணமாக நடு வானில் இருந்து கதவு பிடிங்கி கொண்டு பறந்து விட காற்று விமானத்திற்குள் அமர்ந்திருந்த FRANE SELAK காற்று வெளியே உரிஞ்சிக் கொண்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பிரான்ஸ்  ஒரு வைக்கோல் போரில் விழுந்து உயிர் தப்பினார். ஆனால் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த பிறரை காப்பாற்ற முடியவில்லை. பின்னரும் மூன்று ஆண்டுகள் கழித்து FRANE SELAK பயணம் செய்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. நான்கு பயணிகள் மூழ்கிப் போக எஞ்சியவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் அவர்களில் FRANE SELAK ஒருவர் அதன்பிறகு ஏற்பட்ட சில கார் விபத்துக்களில் இருந்தும் உயிர் பிழைத்துக் கொண்டார்‌. இவ்வாறு தனது வாழ்நாளில் ஏழுமுறை தீவிர விபத்துக்களில் இருந்து உயிர் தப்பிய பிரண்ட்ஸ் எல்லாருக்கும் கடந்த 2003 ஆம் ஆண்டு அவரது 73 வது பிறந்த நாளில் ஒரு லட்சத்து பத்தாயிரம் டாலர்கள் லாட்டரி சீட்டு மூலம் பரிசு கிடைத்தது. பரிசுப் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பிரான்சில் தனது 73 ஆவது வயதில் ஐந்தாவது முறையாகத் திருமணம் செய்து கொண்டார். நிஜமாகவே இந்த ஆசாமி அதிர்ஷ்டக்காரர் தான் .


JULIANE KORPCKE



பெரு நாட்டின் லிமா நகரை சார்ந்த JULIANE KORPCKE  1971 ஆம் ஆண்டு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 17 தான் அமேசான்  காட்டுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த விமானம் இடி தாக்கி அதன் விளைவாக விபத்துக்கு உள்ளாகிக் காட்டுக்குள் விழுந்தது. விமானத்திலிருந்து JULIANE KORPCKE  தாய் உட்பட சக பயணிகள் இறந்து போனார்கள் ஆனால் JULIANE KORPCKEமட்டும் உடைந்த விமானத்திற்குள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பரந்த அமேசான் காட்டுக்குள் பதினோரு நாட்கள் காயங்கள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு மத்தியில் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்த JULIANE KORPCKE உள்ளூர்வாசிகள் சிலர் மீட்டனர். JULIANE KORPCKE உயிர்தப்பிய சம்பவத்தை மையமாக வைத்து MIRACLES STILL HAPPEN என்ற படமும் கூட வெளிவந்துள்ளது.


இபாஸ் - தமிழக அரசு விளக்கம்


வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தற்போதுள்ள நடைமுறைப்படி இ பாஸ் வழங்கப்படும்- தமிழக அரசு


இபாஸ் - தமிழக அரசு விளக்கம்

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தற்போதுள்ள நடைமுறைப்படி இ பாஸ் வழங்கப்படும்- தமிழக அரசு

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு மட்டுமே விண்ணப்பித்தாலே இ பாஸ் வழங்கப்படும்- தமிழக அரசு

மாவட்டங்களுக்கு இடையே செல்ல ஆதார், ரேசன் கார்டு, செல்போன் எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கப்படும்

மாவட்டங்களுக்கு இடையே செல்லும் அனைவருக்கும் வரும் 17ந் தேதி முதல் விண்ணப்பித்தாலே இ பாஸ் வழங்கப்படும்



உலகை அசரவைக்கும் இந்தியாவின் உள்ள கிரிக்கெட் மைதானம்


INDIA'S INTERNATIONAL CRICKET GROUND 12 LET'S SEE ABOUT THIS 


கிரிக்கெட் விளையாட்டு மீதான மோகம் பிற நாட்டைக் காட்டிலும் இந்தியர்களுக்கு மிகவும் அதிகம் எனவே தான் இது பல நூறு கோடிகள் புழங்கும் ஒரு பணக்கார விளையாட்டாக உள்ளது. இதற்காக இந்தியாவில் சுமார் 52 கிரிக்கெட்  ஸ்டேடியம் நிறுவப்பட்டிருக்கின்றன .அவற்றில் பன்னிரண்டு ஸ்டேடியம் மட்டுமே சர்வதேசத்திலும் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் நடைபெறும் இடமாகவும் இருக்கின்றன‌. அந்த 12 கிரிக்கெட் ஸ்டேடியம் என்னென்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.


MOTERA STADIUM

  சர்தார் வல்லபாய் பட்டேல் சோடியம் எனவும் அழைக்கப்படும் இது குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் அமைந்துள்ளது. இன்றைய தேதியில் உலகின் மிகப் பெரிய கட்சியாக இருக்கும் இது ஒரு லட்சத்து பத்தாயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய அளவில் சீட்டிங் கப்பாசிட்டி யை கொண்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது கடந்த  2015-ஆம் ஆண்டு முழுதுமாக இடிக்கப்பட்டு சுமார் 800 கோடி செலவில் பல நவீன வசதிகளோடு மீண்டும் கட்டப்பட்டது .இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான முக்கியமான ஸ்டேடியம் மான இங்கு இந்த  ஆண்டு தொடக்கத்தில் மாபெரும் கூட்டம் ஒன்று கூடிய நமஸ்தே Donald Trump  நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த  ஸ்டேடியம்மானது குஜராத் கிரிக்கெட் அசோசியேஷன்க்கு சொந்தமானது.


EDEN GARDENS

கொல்கத்தா நகரின் அடையாளங்களில் ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று. 1864 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். 67 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் அளவுக்கு சீட்டின் கப்பாசிட்டி கொண்ட இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் இந்திய இராணுவத்துக்கு சொந்தமானது.



SHAHEED VEER NARAYAN SINGH CRICKET STADIUM

நையா ராய்ப்பூர் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் எனவும் அழைக்கப்படும் இது சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள நையா ராய்ப்பூர் நகரில் அமைந்துள்ளது. சுமார் 65 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் அளவுக்கு சீட்டிங் கெப்பாசிட்டியை கொண்ட இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் ஆனது. கடந்த 2008ம் ஆண்டு திறக்கப்பட்டது. சட்டிஸ்கர் அரசாங்கத்துக்கு சொந்தமான இந்த ஸ்டேடியத்தில் ஐபிஎல் மற்றும் 20-20 போட்டிகள் நடத்தப்படுகின்றன.


RAJIV GANDHI INTERNATIONAL CRICKET STADIUM

55 ஆயிரம் பேர் தாராளமாக அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை காண கூடிய அளவுக்கு இட வசதியைக் கொண்ட இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் அமைந்துள்ளது .ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் சொந்தமான இந்த ஸ்டடியம் 16 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.



M.A CHIDAMBARAM STADIUM

தமிழக தலைநகர் சென்னையில் அமைந்திருக்கும் M.A சிதம்பரம் ஸ்டேடியம் 1916 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஈடன் கார்டன் ஸ்டேடியத்திற்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பழமையான இந்த ஸ்டேடியம் 50,000 இருக்கைகளை கொண்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன்க்கு சொந்தமான இது சேப்பாக்கம் ஸ்டேடியம் எனவும் அழைக்கப்படுகிறது.



SHRI ATAL BIHARI VAJIPAYEE EKANA CRICKET STADIUM

உத்திர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் அமைந்திருக்கும் இந்த ஸ்டேடியத்தின் சீட்டிங் கப்பாசிட்டி 50 ஆயிரமாகும்.இது பொது மற்றும் தனியார் இன் கூட்டுறவில் கீழ் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும்.



GREENFIELD INTERNATIONAL STADIUM

இந்த ஸ்டேடியம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.கிரிக்கெட் ஸ்டேடியம் ஆக மட்டுமன்றி ஒரு பல்நோக்கு அரங்கம்மகவும்பயன்படுத்தப்படும் இது கேரளப் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமானது. 50 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட இந்த ஸ்டேடியம் இந்தியாவின் முதல் ஸ்டேடியம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.


JSCA INTERNATIONAL STADIUM COMPLEX

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஜீ நகரில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியம் ஆனது 50 ஆயிரம் பேர் போட்டிகளை காணும் அளவுக்கு இட வசதியைக் கொண்டது .ஜார்கண்ட் அசோசியேஷன்க்கு சொந்தமான இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் ஹோம்  கிரவுண்ட் ஆகும்.



BARABATI STADIUM

ஒடிஷா மாநிலத்தின் கட்டாக் நகரில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியத்தின் சீட்டின் கப்பாசிட்டி 48,000 ஆகும்.

ஒடிசா கிரிக்கெட் அசோசியேஷன் சொந்தமான இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் ஒன்றாக உள்ளது.



VIDARBHA CRICKET ASSOCIATION STADIUM

மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் நகரில் அமைந்திருக்கும் இந்த ஸ்டேடியம் ஆனது ஃபீல்டு ஏரியா  அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆகும்.விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன்க்கு சொந்தமான இந்த ஸ்டேடியத்தின் சீட்டிங் கப்பாசிட்டி 45 ஆயிரம் ஆகும்.


ARUN JAITLEY STADIUM

41800 இருக்கை வசதியை கொண்ட இந்த ஸ்டேடியம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அசோஷியேஷன்க்கு சொந்தமான இந்த ஸ்டேடியத்தில் தான் அணில் கூண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த கிரிக்கெட் வாரியத்தின் முந்தைய பெயர் பெரோஸ் ஷா கோட்லா க்ரவுண்ட் என்பதாகும்.



M CHINNASWAMY STADIUM

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியம் 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.35 ஆயிரம் இருக்கை வசதியை கொண்ட இந்த ஸ்டேடியம் கர்நாடக அரசாங்கத்திற்கு சொந்தமான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகள் மற்றும் பிற முதல் தர கிரிக்கெட் போட்டிகள் வழக்கமாக நடைபெறும் ஸ்டேடியம் ஆனால் இது ஸ்டேடியத்திற்கு தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் பெறும் உலகின் முதல் ஸ்டேடியம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. 

உலகின் 5 மிகப்பெரிய மீன் மார்கெட்டுகள்


TOP 5 FISH MARKETS IN THE WORLD

கடல் மீன்களை பிடித்து கரையில் விற்க கடலைப் போலப் பரந்த இடங்களை ஒதுக்கி இருக்கின்றன சில நாடுகள். கடலில் நாம் உயிருடன் பார்த்திராத ஏராளமான கடல் வாழ் உயிரினங்களை இந்த மீன் மார்க்கெட்டுகளில் உறைந்த நிலையில் இறந்திருப்பதை பார்க்கலாம்!வழங்கலாம்! தினந்தோறும் கடல் உணவுகளை டன் கணக்கில் கையாளும் உலகின் 5 மிகப்பெரிய மீன் மார்கெட் பற்றி இப்போது பார்ப்போம் .




TOYOSU FISH MARKET

ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைந்திருக்கும் toyosu fish market  ஆனது அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க TSUKIJI  மீன் மார்க்கெட்டுக்கு மாற்றாக கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஓல்சல் மீன் மார்க்கெட் ஆனா இது 43 லட்சத்து 92 ஆயிரம் சதுர அடியில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. toyosu fish market  மூன்று பிரிவுகளாக இயங்குகிறது.

  • ஒன்று நுகர்வோருக்கான மொத்த விற்பனை பிரிவு
  • இரண்டாவது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யும் பிரிவு
  • மூன்றாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் பிரிவு

இந்த மீன் மார்க்கெட்டில் மேல் தளங்களில் 40க்கும் மேற்பட்ட food stall இயங்குகின்றன. 400 வகையான கடல் உணவுகளை விற்பனை செய்யும் toyosu fish market ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் டன் கடல் உணவுகளை கையாளுகிறது.



LA NUEVA VIGA MARKET

 ஜப்பானின் toyosu fish market மார்க்கெட்டுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் மார்க்கெட் LA NUEVA VIGA MARKET மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் அமைந்துள்ளது .தினந்தோறும் 1500 கடல் உணவுகளை கையாளும் இந்த மார்க்கெட்டில் இருந்து மீன் உள்ளிட்ட கடல் உணவுகள்  பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 9.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மீன் மார்க்கெட்டில் 202 மொத்த விற்பனை கிடங்குகளில் 55 சில்லரை விலை கடைகள் மற்றும் 165 விற்பனையாளர்கள் இருக்கின்றனர். 300 வகையான கடல் உணவுகளை கையாளும் இந்த மீன் மார்க்கெட் ஆனது 100 வகையான இறக்குமதி செய்யப்பட்ட உடைந்த கடல் உணவுகளையும் விற்பனை செய்து வருகிறது. ஆண்டுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் டன் கடல் உணவுகளை விற்பனை செய்யும் இந்த மீன் மார்க்கெட் சிகோ பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறது.


SYDNEY FISH MARKET

உலகின் மூன்றாவது பெரிய மீன் மார்க்கெட் ஆனால் இது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி நகரில் அமைந்துள்ளது. SYDNEY FISH MARKETஆனது

  • ஒரு மீன்பிடி துறைமுகம்
  • மொத்த விற்பனை நிலையம்
  • புதிய கடல் உணவுகளுக்கான சில்லரை விற்பனை ஆகும்
  • கடல் உணவுகளை சமைத்து விற்கும் உணவு ஸ்டால்
  • ஒரு ரெஸ்டாரன்ட்
  • பழங்கள் மற்றும்
  • காய்கறி கடை
  • பூக்கடை கடல்
  • கடல் உணவுகளை சமைக்க சொல்லி தரும் ஒரு பள்ளி உட்பட பல வசதிகளை கொண்டுள்ளது.

 கிட்டத்தட்ட 480 வகையான கடல் உணவுகளை விற்கும் இந்த மீன் மார்க்கெட் ஆனது. கடந்த 2013 மற்றும் 14 ஆம் ஆண்டில் சுமார் 122 மில்லி டாலர் அளவுக்கு கடல் உணவுகளை வர்த்தகம் செய்து சாதனை படைத்தது.


MERCAMADRID 

 ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டின் இருக்கும் உலகின் நான்காவது பெரிய மீன் மார்க்கெட் ஆகும். சுமார் இரண்டரைக் கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த மீன் மார்க்கெட் ஆனதும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கும் கடல் உணவுகளை அளிக்கிறது.MERCAMADRID800 மீன் விற்பனை நிலையங்களும் அதில் வேலை செய்யும் 9 ஆயிரம் ஊழியர்களும் இருக்கின்றனர் .ஆண்டுக்கு சுமார் 2 லட்சத்து 20 டன் ஆயிரம் கண்கள் கடல் உணவுகளை விற்பனை செய்யும் MERCAMADRID மார்கெட் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.




BILLINGS GATE FISH MARKET

இங்கிலாந்து லண்டன் மாநகரில் இயங்கிவரும் BILLINGS GATE FISH MARKET பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் ஆக இருந்தது.மீன்கள் கிளிஞ்சல்கள் உள்ளிட்ட 150 வகையான கடல் உணவுகளை விற்பனை செய்யும் இந்த மீன் மார்க்கெட் ஆனது 13 ஏக்கர் பரப்பளவில் ஒரு மிகப்பெரிய காம்ப்ளக்ஸ்யும் கொண்டுள்ளது.